உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தயார் அளித்த புகாரின் அடிப்படையில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் பல்லியா பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அக்கிராமத்தில் இருந்த 17 வயது சிறுமி அண்டை வீட்டாரால் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.